வாழை இலையில் விருந்து படைப்பது தான் நம் தமிழர் பண்பாடு. நாம் தட்டில் சாப்பிடுவதற்கும் இழையில் சாப்பிடுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு
* தட்டில் சாப்பிடும் உணவை விட இலையில் சாப்பிடும் போது அதன் சுவை இன்னும் அதிகமாகிறது.
எவர்சில்வர் பயன்பாட்டிற்கு பிறகு வீடுகளில் பெருபாலானோர் இலையை, மறந்து தட்டுக்கு மாறியுள்ளனர். நகரங்களில்தான் வாழைமரம் வளர்த்து இலை பறிக்க எல்லோருக்கும் வாய்ப்பிருக்காது. வாய்ப்புள்ள கிராமங்களிலும் தட்டையே பயன்படுத்துகின்றனர். அதுமட்டுமல்ல வீட்டில் பெண்களுக்கும் சாப்பாட்டு தட்டு கழுவுகிற வேலை மிச்சம். நேரம் மிச்சம். பாத்திரம் கழுவுகிற தண்ணீர் மிச்சம். பாத்திரத்தை கழுவ பயன்படுத்தும் ராசயண சோப்பின் பயன்பாடு குறைவு என நன்மைகளை உணரமுடிந்தது.இலை, பாலீதீன் தாள்களைப் போல் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுத்தாது என்பது இன்றைய விஞ்ஞான உலகுக்கு முக்கியச்செய்தி.நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையில் எத்தனை சிறப்பு அம்சங்கள் அவர்கள் வகுத்துள்ள முறைப்படி நாம் உணவு உண்டு வேலை செய்தாலே நிச்சயம் நோயின்றி வாழலாம் அதற்கு வாழை இலையில் சாப்பிடுவதும் ஓர் உதாரணமே.
வாசகர்களே இன்று முதல் நாமும் வாழை இலை பயன்படுத்த ஆரம்பிக்கலாமே.....
* தட்டில் சாப்பிடும் உணவை விட இலையில் சாப்பிடும் போது அதன் சுவை இன்னும் அதிகமாகிறது.
* வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்
* சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மணமாகவும் இருக்கும்
வாசகர்களே இன்று முதல் நாமும் வாழை இலை பயன்படுத்த ஆரம்பிக்கலாமே.....
0 comments:
Post a Comment