Aug 21, 2012 | By: R.T.அமுதன்

மாவிலைத் தோரணம் கட்டுவது ஏன் ?

மாவிலை ஒரு கிருமிநாசினி. இதற்கு துர் தேவதைகளை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுக்கும் சக்தியும் உண்டு. மேலும் மாவிலை அழுகுவது கிடையாது. முறையாக காய்ந்து உலரும். இதுபோல், வாழ்க்கையும் கெட்டுப்போகாமல் நீண்டகாலம் நடைபெற்று முற்றுபெற வேண்டும் என்ற நம்பிக்கையுடன், மங்கலம் பெருக மாவிலைத் தோரணம் கட்டுகிறோம்.

தாலிகட்டும் மந்திரத்தின் பொருள்

திருமணத்தில் பெண்ணின் கழுத்தில் மாங்கல்யம் கட்டும் போது,

"மாங்கல்யம் தந்துனானே

மமஜீவன ஹேதுநா

கண்டே பத்நாமி ஸுபகே

த்வம ஜீவ சரதஸ்சதம்!!'

 

 என்று சொல்கிறார்கள். இதன் பொருளைத் தெரிந்து கொள்ளுங்கள்.

"மங்கலமான பெண்ணே! உன்னோடு இன்று நான் துவங்கும் இல்லறவாழ்வு நல்லமுறையில் இருக்க வேண்டும் என்று உறுதியளித்து, இந்த திருமாங்கல்யத்தை உன் கழுத்தில் அணிவிக்கிறேன். என் இல்லத்துணைவியாக, என் சுகதுக்கங்களில் பங்கேற்று, நிறைந்த யோகத்துடன் நீ நூறாண்டு காலம் வாழ்வாயாக,'' .

காலையில் சூரிய நமஸ்காரம் செய்வது எதற்கு?

தொன்று தொட்டே பண்டைய மக்கள் பற்றி வந்த ஓர் ஆசார முறை சூரிய நமஸ்காரம். உடல் மற்றும் மனது உறுதியடையவும் அமைதியடையவும் உதவும் ஆசாரம் இது. இதை விதி முறைகள் படி செய்யும் போது உடல் பாகங்களில் ஆற்றலும் சக்தியும் வருகின்றது.

மேற்கத்திய நாடுகள் உட்பட உலகின் எல்லா பாகங்களிலும் இந்த ஆசார முறை பிரசித்தி பெற்று இருகிறது. ஜிம்னாஸ்டிக், சன்பாத், என்ற பெயர்களில் சூரிய நமஸ்காரத்தை உட்படுத்திய பயிற்ச்சிகள் செய்து வருகின்றனர்.

சூரிய நமஸ்காரம் வாயிலாக நமது உடலில் உள்ள எல்லா மூட்டுக்களும் அசைவு ஏற்படுகிறது. சருமத்தில் விட்டமின் டி உற்பத்தி செய்யும் திறன் காலை சூரிய கதிர்களுக்கு உண்டு. கல்சியம் உற்பத்தியை கட்டு படுத்தும் திறனும் உண்டு என்பது அறிவியல் துறைகள் அங்கீகரித்து உள்ளன. மேலும் உறுப்புகளும் உறுதி பெறுவதால் காச நோய் அணுக்களின் ஆக்கிரமிப்புகளும் தடுக்கின்றன.

தொடர்ச்சியாக சூரிய நமஸ்காரம் செய்வதனால் அகால வயது முதிர்ச்சியையும் ஓரளவுக்கு தடுக்கலாம். மூட்டுக்கள் நல்ல லாபகம் அடைகின்றன. தொப்பை வயிறு வருவதை தடுக்க இயலுகிறது. மனதுக்கும் உடலுக்கும் உற்சாகம் நிலைநிறுத்தவும் சூரிய நமஸ்காரம் உதவுகிறது.

சூரிய நமஸ்காரம் செய்பவர்கள் ஆரம்பத்தில் அனுசரிக்க வேண்டிய சில விஷயங்களை பார்ப்போம். பரிசுத்தமான எளிய வாழ்கை வாழ வேண்டும். அளவான உணவு அருந்த வேண்டும். குளிப்பது குளிர் நீர் ஆனால் நன்றாயிருக்கும். விசாலமானதும் காற்றோட்டம் உள்ளதுமான இடத்தில் நமஸ்காரம் செய்ய வேண்டும். நமஸ்கார வேளையில் மிக அவசியமான ஆடை மட்டும் தளர்த்தியாக அணிய வேண்டும்.

தேநீர், காபி, கொக்கோ, புகை இலை, மது பானம், முதலியவை அருந்த வேண்டாம். இப்டி அநேக விஷயங்களை கவனித்து சூரிய நமஸ்காரம் செய்ய தொடங்க வேண்டும்.

அமாவாசை அன்று அசைவ உணவை தவிர்ப்பது ஏன்?

அமாவாசஎன்பதசூரியனுமசந்திரனுமசந்திக்குமஒரபுள்ளி. அந்நாளிலசூரியன், சந்திரனஆகியவற்றிலஇருந்துவருமஅதிகமாஈர்ப்புததன்மகாரணமாநமதஉடலினசெரிமானத்திலஒரபாதிப்பஏற்படுத்துகிறது. செரிமானத்தன்மஅந்நாளிலகுறைப்பதால்தானஅமாவாசையன்றவிரதமமேற்கொள்வதநல்லதஎன்றநமதமுன்னோர்களகண்டுள்ளார்கள். சும்மவிரதமஇரஎன்றாலயாருமஇருக்மாட்டார்களஎன்பதற்காகவே, உனதமுன்னோர்களுக்காவிரதமஇரு, உனதவாழ்விலஇன்றைக்கஅனுபவிக்குமஅனைத்தையுமபெற்றுததந்அவர்களுக்காவிரதமஇரஎன்றகூறிவிட்டனர். இப்படித்தானஅதனஒரநன்றிக்கடனசெலுத்துமநாளாஆக்கியுள்ளனர்.

விரத நாட்களில் ஏன் எண்ணை தேய்த்து குளிக்க கூடாது?

விரத நாட்களிலும் நோன்பு நாட்களிலும் எண்ணை பூசி குளிக்கலாகாது. எண்ணை பூசிக்குளிப்பது முக்கியமாக கருதும் நாம் இப்படி ஒரு விதிவிலக்கை சொல்வது மூட நம்பிக்கை என்று கூறிவந்தனர். ஆனால் இதன் விஞ்ஞான அங்கீகாரம் இப்போது வெளிபடுத்தப்பட்டுள்ளது.

சனி கிரகத்தின் சக்தியில் இருந்து உருவானதாக கருத படும் எண்ணை தலைக்கு சுற்றிலும் ஓர் புகை வளையம் உருவாக்குகிறது. இவ் வளையம் இருப்பதால் கிரங்களில் இருந்து வரும் காந்த அலைகள் உடலுக்குள் நுழைய இல்லாமல் போகின்றது. விரத நாட்களில் உடல் மற்றும் மனதுக்கு தூய்மை மிக முக்கியமானதால் கிரகங்களில் இருந்தும் நட்சத்திரங்களில் இருந்தும் பூமிக்கு வரும் காந்த சக்தி அலைகள் உடலுக்கு மிக அவசியம்.

இவ்வலைகள் உடலுக்குள் நுழைய எண்ணை தடையாக இருப்பதால் தான் விரத நாட்களில் எண்ணை தேய்த்து குளிப்பதற்கு விதி விலக்கு ஏற்பட்டுள்ளது.