Nov 30, 2012 | By: R.T.அமுதன்

நிலவேம்பு கசாயம்

நிலவேம்பு கஷாயம் என்பது 9 வகை மூலிகைகள் அடங்கிய மருந்தாகும். நிலவேம்பு, வெட்டிவேர், விலாமிச்சம் வேர், பற்படாகம், பேய்புடல், கோரைக் கிழங்கு, சந்தனச்சிறாய், சுக்கு, மிளகு ஆகிய 9 மூலிகைகளை நன்கு உலர வைத்து சம அளவில் கலந்து, அரைத்துப் பொடியாக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அந்தப் பொடியை தண்ணீரில் கலந்து கொதிக்கவைத்து காய்ச்சி வடிகட்டி கஷாயமாக குடிக்க வேண்டும். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காலை மற்றும் மாலையில் 30 மில்லி நிலவேம்பு கஷாயத்தை தொடர்ந்து ஒரு வாரத்துக்கு கொடுத்தால் போதும். எத்தகைய காய்ச்சலும் முற்றிலும் குணமாகிவிடும்.
காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமன்றி அனைவரும் நிலவேம்பு கஷாயத்தை தினமும் குடிக்கலாம். அதன்மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி வளரும். இதை அனைவரும் பயன்படுத்தி நலம் பெறுங்கள் .